திருச்சி ஊரகத்துறையில் வேலைவாய்ப்பு!




திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அறிவிப்பின் படி திருச்சி மாவட்டம்   மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் பணியிடங்களுக்கு   இனசுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது .


தகுதி :
அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும்  இரவுக்காவலர் பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் எழுத படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது.

வயது வரம்பு :
18 வயது முதல் 35 வயது வரை .
பிரிவு வாரியாக  SC / ST(A )  - 35,MBC / BC  - 32,OC -30.

விண்ணப்பதாரர்கள் மண்ணச்சநல்லூர் ஒன்றிய ஊராட்சி பகுதிக்கு உட்பட்டவராகவும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு  செய்தவராகவும்  இருக்க வேண்டும்.


விருப்பமுள்ளவர்கள் சுய சான்றொப்பமிட்ட விண்ணப்பம் தயாரித்து 13-04-2020 அன்று மாலை  5.45 மணிக்குள் ஆணையர் ஊராட்சி ஒன்றியம், மண்ணச்சநல்லூர்  என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !