🔥 RiseTamilDecodes
✅ சித்தர் வாழ்வியல் ✅ கோயில் ரகசியங்கள் ✅ மர்மங்கள்
புதிய வீடியோக்களை தவறாமல் பார்க்க Subscribe செய்யுங்கள்! 🚀
▶ SUBSCRIBE

ஆதி மருத்துவர் சவர தொழிலாளர் ஆக்கப்பட்ட வரலாறு!






அம்பட்டர், நாவிதர், நாசுவர், பரியாரி, பண்டுவர், பண்டிதர், குடிமகன் ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் மக்களை "பாரம்பரிய பார்பர்கள்" (traditional barber) என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். 'பார்பர்' என்ற சொல் முடி வெட்டுதல், சவரம் செய்தல் ஆகிய பணிகளைச் செய்வோரைக் குறித்து நிற்கிறது.

மன்னர்கள் காலத்தில் இவர்கள் சிறந்த மருத்துவர்களாகவும் ,கோயில் பூசாரிகளாகவும் இருந்துள்ளார்கள் என்று இந்நூலின் ஆசிரியர் கொ.ரகுபதி அவர்கள் பல்வேறு ஆய்வுகளின் மூலம் கண்டறிந்து அவர்கள் எவ்வாறு சவர தொழிலாளர்களாக மாற்றப்பட்டனர் எனபதை இந்நூலில் தெளிவாக விவரிக்கிறார்.