Government of TamilNadu
Department of Economics and Statistics
நோக்கங்கள்:
- மாநில வருமான மதிப்பீடுகள், பொருளாதார கணக்கெடுப்பு, வேளாண்
கணக்கெடுப்பு, சிறப்பு ஆய்வுகள் மற்றும் மாநில பொருளாதாரத்தின் மாதாந்திர
அறிக்கைகள் உட்பட பொது மற்றும் தனியார் தரவு மூலங்களின் புள்ளிவிவர தரவு
சேகரிப்பு, தொகுத்தல்.
- பயிர்கள் வாரியாக பாசன மற்றும் நீர்ப்பாசன பரப்பளவு உள்ளிட்ட பல்வேறு
வகைப்பாடுகளின் கீழ் புவியியல் நிலத்தைப் பயன்படுத்துவது பற்றிய தகவல்களை
சேகரிக்கவும் மற்றும் நில பயன்பாட்டு முறை, பயிர் பல்வகைப்படுத்தல், பாசன
மற்றும் பயிர்கள் பற்றிய பல்வேறு திட்டங்களின் தாக்கம் ஆகியவற்றிற்கான தரவு
பயன்படுத்தப்படுகிறது.
நடைமுறையில் உள்ள திட்டங்கள்
பயிர் மதிப்பீட்டு ஆய்வு
தமிழ்நாட்டில் நெல் சிறுதானியங்கள் ( சோளம் , கம்பு , கேழ்வரகு ) ,
வேர்க்கடலை , எள் , சூரியகாந்தி , கரும்பு , பருத்தி , பயறுகள் (துவரை ,
உளுந்து , பச்சைப்பயிறு ) ஆகிய பயிர்களின் சராசரி விளைச்சலையும், மொத்த
உற்பத்தியையும், துல்லியமாகக் கணிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் புள்ளி இயல்
துறை பயிர் மதிப்பீட்டு ஆய்வுகளை நடத்தி வருகிறது . தேசிய மாதிரி ஆய்வு
நிறுவன இயக்குநரின் தொழில் நுட்ப ஆலோசனைகளின் கீழ் இப்பயிர் மதிப்பீட்டு
ஆய்வுகள் நடத்தப்பபடுகின்றன .
பயிர் மதிப்பீட்டு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய மாதிரி கிராமங்கள் புள்ளி
இயல் துறையால் தேர்வு செய்யப்பட்டு பயிர் அறுவடைப் பணி வேளாண்மைத் துறை
பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு , களப்பணி பல்வேறு நிலைகளில் குறிப்பாக
அறுவடை நிலையில் புள்ளி இயல் துறை வேளாண்மைத் துறை, தேசிய மாதிரி ஆய்வு
நிறுவன அலுவலர்களால் மேற்பார்வையிடப்படுகின்றன.
பிரதம மந்திரி வேளாண் காப்பீட்டுத் திட்டம்
புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்ற பாதிப்பு ஏற்படும்போதும்,
பூச்சி மற்றும் நோயினால் பயிருக்கு சேதம் ஏற்படும்போதும் விவசாயிகளுக்கு
காப்பீடு மற்றும் நிதி உதவி அளித்தல்.
சிறுபான்மைப் பயிர் திட்டம்
இத்திட்டத்தின் கீழ் விளைச்சலை மாவட்ட அளவில் கணிப்பதற்காக மிளகாய் ,
மல்லி , மரவள்ளி , வெங்காயம் மற்றும் முந்திரி ஆகிய பயிர்களில் ஒவ்வொரு
வருடமும் தேர்விடப்பட்ட கிராமங்களில் தோட்டக்கலைத் துறையினராலும் , புள்ளி
இயல் துறையினராலும் மேற்கொள்ளப்படுகிறது .
பயிர் மேம்பாட்டுத் திட்டம்
கிராம நிர்வாக அலுவலர்களால் ஒவ்வொரு பருவத்திலும் பயிர் பரப்பாய்வு
சாpயான முறையில் மேற்கொள்ளப்படுகிறதா , கிராம நிர்வாக அலுவலர்களால்
பேணப்படும் அடங்கலில் பயிர் பரப்பின் கூட்டுத் தொகை சரியாக உள்ளதா என
சரிபார்த்தல் பணி புள்ளி இயல் துறையால் மேற்கொள்ளப்படுகிறது.