10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு ரூ.21,700 சம்பளத்தில் கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு!

 பாதுகாப்பு அமைச்சகதின் அங்கமான இந்திய கடலோர காவல்படை , உள்நாட்டு கிளை (சமையல்காரர் மற்றும் பணிப்பெண்) பதவிக்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  மொத்தம் 50 காலியிடங்கள் உள்ளன.




ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  30/11/2020 முதல் 07/12/2020 தேதிக்குள் அதிகாரபூர்வ இணையதளமான www.joinindiancoastguard.gov.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.​​

தேர்வு செய்யப்படும்  முறை :

 எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

குறிப்பு :  மொத்தம் 5 மண்டலங்களாக விண்ணப்பிக்கும் முறை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்  தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள்   (Eastern Zone) என்பதை  தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு  View

அதிகாரப்பூர்வ  இணையதளம்  http://www.joinindiancoastguard.gov.in


Diploma மற்றும் BE/B.TECH தேர்ச்சிக்கு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனதில் வேலைவாய்ப்பு!

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !