அறிந்து கொள்வோம் - மத்திய அரசின் கல்விக்கடன் திட்டம்!







திட்டத்தின் நோக்கம்

பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ளவர்கள் என்ற காரணத்திற்காக, எந்த ஒரு மாணவனுக்கும் அல்லது மாணவிக்கும் உயர் கல்வி மறுக்கப்படக்கூடாது. அவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக  கொண்டு வரப்பட்டதே இத்திட்டம்.

வங்கிகளின் பங்கு

எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதை அரசு நேரடியாக மேற்கொள்ள முடியாது. எனவே இத்திட்டம்  அரசு வங்கிகளின் மூலம் செயல் படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை பொறுத்த வரையில் வங்கிகள் தாமாக நிபந்தனைகளை  விதிக்கவோ அல்லது  தன் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப  செயல்படவோ முடியாதுமொத்தத்தில்  கல்விக்கடனை பொறுத்த வரையில், அதை செயல்படுத்தும் வெறும் ஏஜெண்ட் தான்  அரசு வங்கிகள்.

கடன் உதவி பெற தேவையான தகுதிகள்

மாணவர்  அல்லது மாணவி  இந்திய குடிமகனாக இருக்கவேண்டும்.
  1. தொழில் படிப்பு  ( PROFESSIONAL COURSE) அல்லது  தொழில் நுட்ப படிப்பில் ( TECHNICAL COURSE)  நூளைவுத்தேர்வு மூலமாக சேர்ந்திருக்க வேண்டும். இது வெளிநாடு மற்றும் இந்தியாவில்  கல்வி பயிலும் மாணவர்களுக்கு பொதுவானவை.
  2. இந்தியாவில் கல்வி கற்க 10 லட்சம் ரூபாயும், மெரிட் உள்ளவர்கள் மற்றும் அத்தியாவசிய தேவை உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக 15 லடசம் ரூபாயும், வெளிநாட்டில் பயிலும் மாணவர்களுக்கு  20 லடசம் ரூபாயும்,  25 லட்சம்  ரூபாயும்  வழங்கப்படும்.
  3. கல்விக்கட்டணம் , தங்கும் விடுதி கட்டணம், தேர்வு கட்டணம், புத்தகங்கள், கருவிகள், கணனி  ஆகியவற்றிற்கு தேவைப்படும் தொகையை மட்டுமே கடனாக பெற இயலும். வெளி நாட்டில் படிப்பவர்கள்  இத்துடன் பயண கட்டணத்தையும் செர்த்துக்கொள்ளலாம்.
  4. முன் செலுத்த வேண்டிய தொகை (  MARGIN): 4 லட்சம் வரையான தொகைக்கு  எதுவும் செலுத்த வேண்டியது இல்லைஅதற்கு மேற்பட்ட தொகைக்கு  இந்தியாவில் கல்வி பயிலுபவர்கள் 5% , வெளிநாட்டில் பயிலுபவர்கள்  15% செலுத்த வேண்டும்.
  5. செக்யூரிட்டி ( SECURITY ) :  4 லட்சம் வரையிலான தொகைக்கு  மாண்வருடன் சேர்ந்து பெற்றோரும்  கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். (COOBLIGATION).  4 லட்சத்திற்கு மேல் 7.5 லட்சம் வரை  பெற்றோருடன் பொருத்தமான மூன்றாம் நபர்  ஜாமின் தேவை. 7.5 லட்சத்திற்கு மேல்  கடன் தொகைக்கு தாகுந்தவாறு  சொத்து ஜாமின் தேவை.
  6. கடனை திருப்பி அளிக்கவேண்டிய காலம் ( REPAYMENT  PERIOD):  படிப்பு காலம் ( COURSE PERIOD) முடிந்ததிலிருந்து  ஒருவருடம் , அல்லது வேலை பார்க்க ஆரம்பித்ததிலிருந்து ஆறு மாதம். இதில் எது முன்பாக வருகிறதோ அதன்படி.
  7. குடும்ப வருமானம் இவ்வளவு வருமானம் இருக்கவேண்டும்  என்ற நிபந்தனை எதுவும் இல்லை.
  8. மாணவர் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள வங்கி கிளையில் விண்ணப்பிக்க வேண்டும்.
  9. கடனுதவி பெற அங்கிகரிக்கப்பட்ட படிப்புகள் இந்தியாவில்  - டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புமற்றும்  மின்னனு துறையால் அங்கீகரிக்கப்பட்ட  கணனி படிப்புகள். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு - Course of study abroad : Job-oriented professional/technical courses offered by reputed universities, MCA,MBA, MS etc.Courses conducted by CIMA - London, CPA in USA etc
  10. வயது வரம்பு :   இந்தியாவில் பயிலும் மாணவர்களுக்கு  15 - 30 வயது. வெளிநாட்டில் பயிலும் மாணவர்களுக்கு  18 - 35 வயது.
இவைதான் கல்விக்கடன் பெற தேவையான தகவல்கள். இதில் குறிப்பிடப்பட்டு உள்ள அனைத்து நிபந்தனைகளும் எல்லா வங்கிகளுக்கும் பொதுவான ஒன்று.
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு, தேவையான ஆவணங்களுடன்  விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை பரிசீலித்து முடிவெடுக்க வங்கிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள  காலக்கெடு -  15 நாட்களிலிருந்து 30 நாட்கள்.
ஆதாரம் : மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசு


கல்வி கடனுக்கான மத்திய அரசின் இணையதளம்  





#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !