காலஞ்சென்ற தி.மி. சேஷகிரி சாஸ்திரியாரவர்களது 'திராவிட சப்த தத்துவம்' என்ற நூல் முன்னரேயேற்பட்டுள்ள தமிழிலக்கணங்களைப் பாஷை நூலமைதிகட்குத் தக்கபடி மாற்றிப் புத்திலக்கணமாக வகுத்ததொன்றாம்.
அது பொது நோக்காய்ச் செல்லுதலின்றிச் சிறப்பு நோக்காய்ச் சொன்மரபுஞ் சொல்லிலக்கணமுமே கூறிச்சென்றது. ஆகவே ஆசிரியர் மேற்கூறியவாறு ஒரு நூல் செய்ய விரும்பித் 'தமிழ் மொழியின் வரலாறு' என்னும் இந்நூலைப் புனைந்து வெளியிட்டுள்ளார்