வரலாற்றில் இன்று | மார்ச் 3 (MARCH 03)


                                    மார்ச் 3 (MARCH 03)

 * 3 March 1575 முகலாயப் பேரரசர் அக்பர், பஜாவுரா போர் என்று அழைக்கப்படும் துக்காராய்(Tukaroi) போரில் வங்காளப் படையைத் தோற்கடித்தார். மொகலாயர்களுக்கும், வங்காள சுல்தானியத்திற்கும், பீகாருக்கும் இடையே போர் நடந்தது. முகலாயப் பேரரசின் எல்லைப்புற ச்சாவடியாக இருந்த ஜமானியா கோட்டைவங்காள சுல்தான் கைப்பற்றினார். இது அக்பருக்கு யுத்தத்திற்கு ஒரு காரணம்.

*G.M.C பாலயோகி அவர்களின் நினைவு தினம் 3 March 2002. இந்திய வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். மக்களவையின் 12வது சபாநாயகராகவும் பதவி வகித்தார்.

*இந்திய நகைச்சுவை நடிகரும் இயக்குனருமான ஜஸ்பால் பட்டி(Jaspal Bhatti) யின் பிறந்த நாள் 3 March 1955. சாதாரண மக்களின் பிரச்சினைகளை நையாண்டி செய்து பார்த்து புகழ் பெற்றவர். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஃப்ளாப் ஷோ போன்ற நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார். "நகைச்சுவை மன்னன்" என்று அழைக்கப்பட்ட இவர் பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

*இந்தியாவின் பிரபல கவிஞரும் விமர்சகருமான ஃபிராகோரா கோரக்பூரின்(Firaq Gorakhpuri) நினைவு நாள் (3 March 1982). அவரது உண்மையான பெயர் ரகுபதி சகாய். இந்தியாவில் இருந்து வந்த புகழ்பெற்ற சமகால உருது கவிஞர்களில் ஒருவர்.

*3 March 1839  இந்திய தொழிலதிபரான டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் பிறந்த நாள். அவர் "இந்தியத் தொழில்துறையின் தந்தை" என்றும் போற்றப்படுகிறார்.


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !