இந்திய James Bond Ajit Dovalன்.. மெய்சிலிர்க்கும் உரை!

Ajit Doval Speech - Tamil Script

Exclusive | இந்திய James Bond Ajit Dovalன்.. மெய்சிலிர்க்கும் உரை | Ajit Doval Speech in Tamil

முன்னுரை மற்றும் இளைஞர்களுக்கான செய்தி

"வாழா என் வாழ்வை வாழவே... அனைவருக்கும் வணக்கம். முக்கியமாக மிகவும் கடினமான போட்டிக்கு பிறகு இங்கு வந்திருக்கும் 3000 இளைஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு அமைச்சருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இங்கு வருவது குறித்து சிறிது குழப்பத்தில் இருந்தேன். எனது களம் வேறு. இங்கு இருப்பவர் பெரும்பாலானோர் என்னை விட 60 வயதுக்கு மேல் இளையவர்கள். நான் சுதந்திர இந்தியாவில் பிறக்கவில்லை. நான் உங்களிடம் என்ன பேச முடியும்? எந்த விஷயம் குறித்து உங்களிடம் பேச முடியும்? நான் இளைஞனாக இருந்த காலத்தை கூட மறந்துவிட்டேன். நீங்கள் இளைஞர்களாக இருக்கும் இந்த காலம் மிகவும் மாறியிருக்கிறது.

ஆனால் ஒன்று மிகவும் பொதுவானது. நான் இளைஞனாக இருந்த போதும், இப்பொழுதும் ஒரு விஷயத்தை மட்டும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். உங்களுக்கு தெரிகிறதோ இல்லையோ, மிகவும் சிறிய விஷயம், ஆனால் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்க கூடிய விஷயம். உங்கள் வாழ்க்கை எதை நோக்கி செல்லும், எப்படி செல்லும் என்பதையும் தீர்மானிக்க கூடிய விஷயம் அதுதான் உங்களின் முடிவெடுக்கும் திறன்."

முடிவெடுக்கும் திறன் (Decision Making)

"நீங்கள் அனைவரும் ஒவ்வொரு தினமும் ஏதாவது ஒரு முடிவை எடுக்கிறீர்கள். அது சிறியதாக இருக்கலாம் அல்லது பெரிய முடிவாக இருக்கலாம். நீங்கள் வளர வளர நிறைய விஷயங்கள் குறித்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? பிரதமர் அவர்கள் போகும் வேகத்தை பார்த்தால் அது தானாகவே 'ஆட்டோ மோடில்' (Auto mode) சென்று வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைந்துவிடும். ஆனால் கேள்வி என்னவென்றால், இந்த வளர்ந்த பாரதத்தை யார் வழிநடத்துவது?

ஒரு தலைவரின் மிகப்பெரிய பலம், மிகப்பெரிய திறமை மற்றும் ஆற்றல் என்னவென்றால், அந்த தலைவர் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார். அந்த முடிவை தன் முழு நம்பிக்கை மற்றும் செயல் மூலம் நிறைவேற்றி விடுவார். நீங்கள் வளர்ந்த இந்தியாவின் தலைவராக விரும்பினால்—அது எந்த துறையாக இருந்தாலும் சரி, சயின்ஸ், டெக்னாலஜி அல்லது செக்யூரிட்டி ஃபீல்ட் (Security field) எதுவாக இருந்தாலும்—முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த முடிவை எடுக்கும் திறனை இப்போதிலிருந்தே நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்."

தொலைநோக்கு பார்வை

"ஒரே ஒரு சிறிய குறிப்பை மட்டும் தருகிறேன். நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அது இன்றைக்கான முடிவாக இல்லாமல், வருங்காலத்திற்கான முடிவாக இருக்க வேண்டும். தொலைநோக்கு பார்வையுடன் முடிவுகளை எடுங்கள். இன்று மிகவும் குளிராக இருந்து, நீங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இப்பொழுது நீங்கள் எடுக்க வேண்டிய முடிவு 'நாம் தூங்கலாம்' என்பது அல்ல; நான்கு மணிக்கு எழுந்து நாம் ஓட வேண்டும், நம் உடல் தகுதியை பராமரிக்க வேண்டும் என்பதுதான்.

ஜனவரி முதல் தேதி பலர் பல முடிவுகளை எடுத்திருப்பீர்கள்... 'நிச்சயமாக நாளை முதல் நான் சமூக ஊடகங்களை பார்க்க மாட்டேன்', 'நேரத்தை வீணாக்க மாட்டேன்', 'தினமும் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வேன்' என்று. சரியான முடிவை எடுப்பது மிகவும் முக்கியமானது. உங்கள் முடிவுகளை தொலைநோக்கு பார்வையுடன் எடுங்கள். இந்த முடிவுக்கு பிறகு எனது அடுத்த முடிவு என்னவாக இருக்கும்? அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்று சிந்தியுங்கள்."

கனவுகளும் வரலாறும்

"கனவுகள் வாழ்க்கையை உருவாக்காது. ஆனால் கனவுகள் வாழ்க்கைக்கு சரியான திசையை கொடுக்கும். அந்த கனவுகளை முடிவுகளாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றுவதன் மூலம் அந்த கனவுகள் நனவாகும்.

சுதந்திர இந்தியாவில் பிறந்தது உங்களின் அதிர்ஷ்டம். இந்த சுதந்திர இந்தியா இப்பொழுது இருப்பதைப் போல் சுதந்திரமாக இருக்கவில்லை. பல நூற்றாண்டுகளாக நம் முன்னோர்கள் இதற்காக பல தியாகங்கள் செய்தனர். பலரை தூக்கிலிட்டார்கள். பகத் சிங் தூக்கு மேடை ஏறினார். சுபாஷ் சந்திர போஸ் தன் வாழ்நாள் முழுவதும் போராடினார். மகாத்மா காந்தி சத்யாகிரகம் செய்தார். நமது கிராமங்கள் பற்றி எரிந்தது, நமது நாகரீகம் அழிக்கப்பட்டது, நமது கோயில்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. நாம் ஒன்றும் செய்ய முடியாமல் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.

இந்த வரலாறு நமக்கு ஒரு சவாலை கொடுக்கிறது. இந்த நெருப்பு இன்று ஒவ்வொரு இளைஞனுக்கும் உள்ளே இருக்க வேண்டும். 'பழிவாங்குதல்' என்ற வார்த்தை நல்லதல்ல. ஆனால் 'பழிவாங்க வேண்டும்' என்பது பெரிய சக்தியை கொடுக்கிறது. நாம் ஒரு சிறந்த நாடாக இந்தியாவை திரும்பிக் கொண்டு செல்ல வேண்டும். நாம் யாருடைய கோயில்களையும் அழிக்கவில்லை, எங்கும் சென்று கொள்ளை அடிக்கவில்லை. ஆனால் நம் நாட்டின் பாதுகாப்பு பற்றியும், ஏன் நம்மைப் பற்றியுமே நாம் சரியாக புரிந்து கொள்ள முடியாததால் நாம் எதிர்கொண்ட ஆபத்துகள் அதிகம்."

யூதரின் கதை மற்றும் மன உறுதி

"செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு வயதான யூதர் ஒருவர் இருந்தார்... பிஷப் அவரிடம் 'ஏன் வருத்தமாக இருக்கிறாய்?' என்று கேட்டார். அதற்கு அந்த யூதர், '2000 ஆண்டுகளாக நாங்கள் போராடியும் இந்த நெருப்பை அணையவிடாமல் பார்த்துக் கொண்டோம். அந்த நெருப்பை வரும் சந்ததியினரும் மறக்க மாட்டார்கள். அது எங்களை மீண்டும் பலசாலியாக மாற்றும். அதை நினைத்து அழுதேன்' என்று கூறினார்.

நாமும் நம்முடைய அந்த உணர்வால் ஊக்கம் பெற வேண்டும். பொருளாதாரம், பாதுகாப்பு, டெக்னாலஜி ஆகிய அனைத்து துறைகளிலும் நம்மை வலுப்படுத்த வேண்டும்."

மோட்டிவேஷன் vs டிசிப்ளின் (Motivation vs Discipline)

"சரியான முடிவை எடுக்க நீங்கள் போராட வேண்டும், உழைக்க வேண்டும். மோட்டிவேஷன் (Motivation) என்பது மிகவும் முக்கியம், ஆனால் அது தற்காலிகமானது. உங்கள் டிசிப்ளின் (Discipline - ஒழுக்கம்) தான் உங்களுடனே இருக்கும். உங்கள் மோட்டிவேஷனை வாழ்க்கை முறையாக மாற்றி ஒழுக்கத்தில் கொண்டுவர வேண்டும்.

காலையில் எழுந்து படித்தால் நல்லது என்று யாரோ கூறியிருக்கலாம். ஒரு மூன்று நாட்கள் செய்வீர்கள். நான்காவது நாள் அந்த மோட்டிவேஷன் இல்லை என்றால் செய்ய முடியாது. ஆனால் அதையே உங்கள் டிசிப்ளினாக நீங்கள் மாற்றிக்கொண்டால், அதுவே உங்கள் இயல்பாக மாறிவிடும். எனவே உங்கள் மோட்டிவேஷனை உங்கள் டிசிப்ளினாக மாற்றிக் கொள்ளுங்கள்."

தள்ளிப்போடாதீர்கள்

"ஒரு முடிவை எடுத்த பின் அதற்காக செய்ய வேண்டிய வேலையை தள்ளிப்போடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். செய்ய வேண்டிய வேலை ஏதாவது இருந்தால் அதை இப்போதே செய்யுங்கள். இன்றே செய்யுங்கள். நான் ஒரு அரை மணி நேரம் கூட தள்ளிப் போட மாட்டேன் என்று திடமாய் இருங்கள்."

விடாமுயற்சி மற்றும் நம்பிக்கை

"விடா முயற்சி என்பது மிக முக்கியமான சக்தி. ஒருபோதும் 'முடியாது' என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். கஷ்டம் வரும், தடைகள் வரும். 'நான் அனைத்தையும் தாங்குவேன், ஆனால் ஒருபோதும் என் இலக்கில் இருந்தோ, என் பாதையில் இருந்தோ விலகிச் செல்ல மாட்டேன்' என்ற எண்ணத்துடன் தொடர்ந்து முன்னே செல்ல வேண்டும்.

சுவாமி விவேகானந்தர் சொல்லியிருந்தார்: 'கடவுள் மீது நம்பிக்கை வைக்காதவன் நாத்திகன் அல்ல; நாத்திகன் என்பவன் தன்னை நம்பாதவன்'. உன்னை நீ நம்பினால் உன்னால் எதையும் செய்ய முடியும்."

5 வருட விதி (The 5-Year Rule)

"இது என் 81 வருட வாழ்க்கையின் அனுபவம்... நீங்கள் ஒரு முடிவை எடுத்து அதை நோக்கிச் செல்லும்போது அதற்கு ஐந்து வருடங்கள் கொடுங்கள். ஐந்து வருடங்கள் அந்த முடிவில் உறுதியாக இருங்கள். இந்த வேலையை நீங்கள் ஐந்து வருடங்கள் செய்தால் உங்களுக்குள் ஒரு அற்புதமான சக்தி உருவாகும். அதுதான் உங்கள் மன உறுதி (Willpower)."

அருணிமா சின்ஹா கதை (Arunima Sinha Story)

"நம் நாட்டில் அருணிமா வர்மா (Arunima Sinha) என்ற ஒரு தேசிய வாலிபால் வீரர் இருந்தார். கொள்ளையர்கள் அவரை ரயிலில் இருந்து தள்ளி விட்டார்கள். ரயிலுக்கு அடியில் சிக்கி அவரது கால் துண்டிக்கப்பட்டது. இரவு முழுவதும் எலிகள் கடித்தன. ஆனால் அவர் 'நான் ஊனமுற்றவர் அல்ல, எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவேன்' என்று முடிவெடுத்தார்.

மருத்துவர்கள் முடியாது என்று கூறினார்கள். ஆனால் அவர் மே 21, 2013 அன்று எவரெஸ்ட் சிகரத்தை ஏறினார். அவரிடம் 'பிசிகல் ஸ்ட்ரென்த்' இல்லை, ஆனால் அதைவிட முக்கியமான 'மன உறுதி' இருந்தது. இந்த ஐந்து வருட அட்டவணையை நீங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்."

மன உறுதி (Willpower) தேசத்தின் சக்தி

"அந்த மன உறுதி ஒரு பெரிய சக்தி. அது உங்கள் உடல் ஆற்றல், மெண்டல் எனர்ஜி அனைத்தையும் பல மடங்காக்கிவிடும். 99% மக்கள் அதை விழிக்கச் செய்வதில்லை. வெகு சிலரே தங்கள் ஒழுக்கத்தின் மூலம் அந்த சக்தியை விழித்தெழச் செய்கிறார்கள்.

ஒரு நாட்டின் மன உறுதியை உடைக்கத்தான் சண்டைகள் நடத்தப்படுகின்றன. எதிரியின் மன உறுதி உடைந்துவிட்டால் அவர்கள் தோற்றுவிடுவார்கள். ஆனால் நம் மன உறுதி மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தால் நம்மை யாரும் கைப்பற்ற முடியாது."

சிங்கம் மற்றும் ஆடு (Napoleon's Quote)

"நெப்போலியன் ஒருமுறை கூறினார்: 'ஒரு செம்மறி ஆட்டால் வழிநடத்தப்படும் ஆயிரம் சிங்கங்களைக் கண்டு நான் பயப்படவில்லை; ஆனால் ஒரு சிங்கத்தால் வழிநடத்தப்படும் ஆயிரம் ஆடுகளை கண்டு நான் பயப்படுகிறேன்'.

இங்கு இருக்கும் 3000 இளைஞர்களும் அந்த மாதிரி வழிநடத்தும் சிங்கங்களாக மாற வேண்டும். இன்று நாடு செல்லும் பாதையை தீர்மானித்தது மோடிஜி. அவருக்கு எங்கிருந்து இத்தனை யோசனைகள் வருகின்றன என்றால், அது 'வில்பவர்', 'கமிட்மென்ட்' மற்றும் 'டெடிகேஷன்' (Willpower, Commitment, Dedication) ஆகியவற்றிலிருந்துதான்."

இந்தியாவின் பொருளாதார வரலாறு

"கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டியின் பேராசிரியர் மெல்லிஸ் ஆண்டர்சன் (Angus Maddison) 'World History of Economy' என்ற புத்தகத்தில், கடந்த 1700 ஆண்டுகளாக இந்தியாவும் சீனாவுமே உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். உலக பொருளாதாரத்தில் இந்த இரு நாடுகள் மட்டும் 55-60% பங்களிப்பை கொண்டிருந்தன. பாரதம் பல வெற்றிகளை கண்டிருக்கிறது, பல உச்சங்களை தொட்டிருக்கிறது."

முடிவுரை

"வாழ்க்கையில் நிரந்தரமானது எதுவும் இல்லை. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் நீங்கள் பாதுகாக்க வேண்டும். நாளை ஏதாவது செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் வரைதான் உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும். நீங்கள் இந்நாட்டின் வருங்கால தலைவர்கள். உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி."

Generated for educational purposes based on the video transcript.